தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு ஒரு நல்ல சுய தொழில் தொடங்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் மானியத்துடன் சுய தொழில் தொடங்க கடன் கொடுக்க முன் வந்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக அனைத்து இளைஞர்களும் ரூபாய் 15 லட்சம் வரை கடன் பெற முடியும்.
இந்த திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி யாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் யு ஒய் ஜி எஃப். இதன் மூலமாக 325 திட்டங்கள் அடிப்படையில் ரூபாய் 1.85 கோடி மானியம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய தொழிலை தொடங்க இருப்பார்கள் இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு மாவட்ட அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தை முதலில் கோவை மாவட்ட அரசு செயல்படுத்த முன் வந்துள்ளது. இத்திட்டத்தின் அடுத்தடுத்த நோட்டிபிகேஷன் ஒவ்வொருமாவட்டத்திற்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தகுதிகள்
இந்தத் திட்டத்தில் நீங்கள் பயன் பெற வேண்டுமெனில் இதற்கு ஒரு சில தகுதிகள் மற்றும் வயது வரம்புகள் இருக்கிறது. அவற்றை பற்றி கீழே பார்க்கலாம்.
கல்வித்தகுதி
யூ ஓய் ஜி எஃப் திட்டத்தில் நீங்கள் பயன் பெற வேண்டுமெனில் உங்களுக்கு குறைந்த கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு மேல் நீங்கள் எந்த ஒரு பட்டப்படிப்பை முடித்து இருந்தாலும் நீங்கள் தகுதியானவர்கள்.
வயது வரம்பு
இந்தத் திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இதில் விண்ணப்பிக்க பொதுபிரிவினர் களுக்கு அதிகபட்ச வயது 35 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 45 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் நீங்கள் சிறப்பை பிரிவினில் பெண்கள் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் ஒரு சில மக்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.
வருமானம் தகுதி
உங்களுடைய குடும்ப வருமானம் ஒரு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் இந்த தடத்தில் நீங்கள் பயன் பெறலாம்.
மற்ற தகுதிகள்
இந்த திட்டத்தில் நீங்கள் பயன் பெற உங்களுடைய மாவட்டத்தில் குறைந்த அளவு மூன்று ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இதில் உங்களுக்கு ஒரு சில சான்றுகள் கேட்கப்படும். இந்த திட்டத்தில் சொந்த வீட்டில் வசித்தாலும் அல்லது வாடகை வீட்டில் வசித்தாலும் பயன்பெறலாம்.
கடன் தொகை
உங்களுக்கு இதில் கடன் தொகை கொடுக்க ஒரு சில வரம்புகள் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றைப் பற்றி கீழே பார்க்கலாம்.
நீங்கள் உற்பத்தி தொழில் ( அதாவது ஏதாவது ஒரு பொருளை உருவாக்கும் தொழில் ie. Manufacturing ) செய்ய விரும்பினால் உங்களுக்கு கடன் தொகை 15 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
நீங்கள் சேவை வியாபார தொழில் ( அதாவது உற்பத்தி அல்லாத தொழில்கள் ie. Service ) செய்ய விரும்பினால் உங்களுக்கு அதிகபட்சம் ரூபாய் 5 லட்சம் கடன் தொகை வழங்கப்படும்.
மானியம் விவரம்
இந்தத் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச மானியம் ரூபாய் 2.50 லட்சம் வரை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அப்ளிகேஷன் லிங்க்
இந்த திட்டத்தில் நீங்கள் பயன் பெற வேண்டுமெனில் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி ஆன்லைனில் அப்ளை செய்து கொள்ளலாம். இதற்கு எந்த ஒரு முன் பணமும் ஏற்கப்பட மாட்டாது.
https://www.msmetamilnadu.tn.gov.in
தொலைபேசி எண்கள்
உங்களுக்கு மேலும் ஏதேனும் சந்தேகம் அல்லது கேள்வி இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களை பயன்படுத்தி அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு கடன் தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த தொலைபேசி எண் கோவை மாவட்டத்தில் செயல்படும்.
+91 89 255 33 932
+91 89 255 33 936
நான் சுயமாக தொழில் செய்ய விரும்புகிறேன் அதற்காக என் தகவலை சமர்ப்பிக்கிறேன்
வாழ்த்துக்கள்
Iam house wife. And iam trying a job I am interested in this job